கோவை காரமடை அருகே மூளையைத் தாக்கும் அமீபா தொற்றுக்கு எதிராக தீவிர கண்காணிப்பு

கேரளாவில் மூளையைத் தாக்கும் அமீபா தொற்று பரவியதை அடுத்து, கோவை காரமடை அருகே உள்ள எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore: கேரளாவில் 'அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்' என்ற மூளையைத் தாக்கும் அமீபா தொற்று பரவி வரும் நிலையில், கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களில் கேரளாவில் நான்கு குழந்தைகள் இந்த அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். முதன்முறையாக ஒரு இளைஞரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அதேபோல, கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் 14 வயது சிறுவன் 'நிபா' வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தார்.

இதையடுத்து, கேரளா முழுவதும் 'நிபா' வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இந்த நோய்கள் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கோவை காரமடையில் உள்ள கேரள எல்லைப் பகுதியான கோபனாரியில் ஜூலை 22 முதல் தொடர்ந்து நிபா வைரஸ், அமீபா தொற்று போன்ற காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளாவிலிருந்து வரும் நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.

தற்போது ஆகஸ்ட் 7 அன்று காரமடை அருகிலுள்ள கோப்பனாரி, முள்ளி பகுதிகளில் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து கேரளா செல்வோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. குறிப்பாக கேரளா செல்வோர் நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...