கோவை காரமடை அருகே மூளையைத் தாக்கும் அமீபா தொற்றுக்கு எதிராக தீவிர கண்காணிப்பு

கேரளாவில் மூளையைத் தாக்கும் அமீபா தொற்று பரவியதை அடுத்து, கோவை காரமடை அருகே உள்ள எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore: கேரளாவில் 'அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்' என்ற மூளையைத் தாக்கும் அமீபா தொற்று பரவி வரும் நிலையில், கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களில் கேரளாவில் நான்கு குழந்தைகள் இந்த அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். முதன்முறையாக ஒரு இளைஞரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அதேபோல, கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் 14 வயது சிறுவன் 'நிபா' வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தார்.

இதையடுத்து, கேரளா முழுவதும் 'நிபா' வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இந்த நோய்கள் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கோவை காரமடையில் உள்ள கேரள எல்லைப் பகுதியான கோபனாரியில் ஜூலை 22 முதல் தொடர்ந்து நிபா வைரஸ், அமீபா தொற்று போன்ற காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளாவிலிருந்து வரும் நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.

தற்போது ஆகஸ்ட் 7 அன்று காரமடை அருகிலுள்ள கோப்பனாரி, முள்ளி பகுதிகளில் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து கேரளா செல்வோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. குறிப்பாக கேரளா செல்வோர் நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...