வால்பாறையில் தேயிலைத் தோட்ட குடியிருப்பில் தீ விபத்து: பெரும் சேதத்தை தவிர்த்த தீயணைப்புத் துறையினர்

வால்பாறை நல்ல காத்து எஸ்டேட்டில் இரண்டு வீடுகள் தீப்பற்றி எரிந்தன. தீயணைப்புத் துறையினர் துரித நடவடிக்கை எடுத்து பெரும் சேதத்தை தடுத்தனர். காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.


Coimbatore: வால்பாறை அருகே நல்ல காத்து எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பில் இரண்டு வீடுகள் தீப்பற்றி எரிந்தன. தீயணைப்புத் துறையினரின் விரைவான நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.


வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் எஸ்டேட் நிர்வாகம் வழங்கும் குடியிருப்புகளில் தங்கி, தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகள் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவையாகும்.




நல்ல காத்து எஸ்டேட் முதல் பிரிவில் வசித்து வரும் லட்சுமி என்பவர், காலையில் சாமி கும்பிட்டு விளக்கேற்றி விட்டு வேலைக்குச் சென்றுள்ளார். மதியம் சுமார் 1 மணியளவில் வீட்டின் மேற்கூரை வழியாக புகை வெளியேறுவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். லட்சுமியின் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன. அருகில் வசித்து வந்த வடமாநில தொழிலாளர் சந்தோஷின் வீட்டிற்கும் தீ பரவியது. ஆனால், தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு அந்த வீட்டையும் காப்பாற்றினர்.


தொழிலாளர்கள் வசிக்கும் வீடுகள் தொடர் வீடுகளாக இருப்பதால், ஒரு வீட்டில் தீ பற்றினால் ஆறு வீடுகள் வரை சேதமடையும் அபாயம் உள்ளது. இந்நிலையில், தீயணைப்புத் துறையினரின் விரைவான நடவடிக்கை பெரும் விபத்தை தடுத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வால்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....