வால்பாறையில் தேயிலைத் தோட்ட குடியிருப்பில் தீ விபத்து: பெரும் சேதத்தை தவிர்த்த தீயணைப்புத் துறையினர்

வால்பாறை நல்ல காத்து எஸ்டேட்டில் இரண்டு வீடுகள் தீப்பற்றி எரிந்தன. தீயணைப்புத் துறையினர் துரித நடவடிக்கை எடுத்து பெரும் சேதத்தை தடுத்தனர். காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.


Coimbatore: வால்பாறை அருகே நல்ல காத்து எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பில் இரண்டு வீடுகள் தீப்பற்றி எரிந்தன. தீயணைப்புத் துறையினரின் விரைவான நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.


வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் எஸ்டேட் நிர்வாகம் வழங்கும் குடியிருப்புகளில் தங்கி, தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகள் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவையாகும்.




நல்ல காத்து எஸ்டேட் முதல் பிரிவில் வசித்து வரும் லட்சுமி என்பவர், காலையில் சாமி கும்பிட்டு விளக்கேற்றி விட்டு வேலைக்குச் சென்றுள்ளார். மதியம் சுமார் 1 மணியளவில் வீட்டின் மேற்கூரை வழியாக புகை வெளியேறுவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். லட்சுமியின் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன. அருகில் வசித்து வந்த வடமாநில தொழிலாளர் சந்தோஷின் வீட்டிற்கும் தீ பரவியது. ஆனால், தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு அந்த வீட்டையும் காப்பாற்றினர்.


தொழிலாளர்கள் வசிக்கும் வீடுகள் தொடர் வீடுகளாக இருப்பதால், ஒரு வீட்டில் தீ பற்றினால் ஆறு வீடுகள் வரை சேதமடையும் அபாயம் உள்ளது. இந்நிலையில், தீயணைப்புத் துறையினரின் விரைவான நடவடிக்கை பெரும் விபத்தை தடுத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வால்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...