கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பாஜக கொடியேற்றம் மற்றும் தெருமுனை பிரச்சாரம்

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பாஜக கொடியேற்றம் மற்றும் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. 2024 தேர்தல் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, தமிழக நலன் குறித்த தீர்மானங்கள் விளக்கப்பட்டன.


கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சி கோவை மாநகர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் நகர் மண்டல் சார்பாக பாஜக கட்சிக் கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் 2024 பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழக நலன் கருதி பாரதிய ஜனதா கட்சி மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றிய தெருமுனை பிரச்சாரமும் நடைபெற்றது.



கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து, மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் கிளை பொறுப்பாளர் விமல் இல்லத்திற்கு வருகை தந்து, அங்கு மறைந்த விமலின் தந்தையின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



பின்னர், நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிலையத்தில் தெருமுனைப் பிரச்சாரம் துவக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் மண்டல் தலைவர் மகேந்திர ராஜ் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ரமேஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வில் பல்வேறு மாநில, மாவட்ட மற்றும் மண்டல அளவிலான கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பிரச்சார பிரிவு மாநில செயலாளர் வி என் ராஜன், பிரச்சார பிரிவு மாநில செயலாளர் முரளிதரன், மாவட்ட பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட பொதுச் செயலாளர் ப்ரீத்தி லட்சுமி, மாவட்டத் துணைத் தலைவர் மகாலட்சுமி, மாவட்ட செயலாளர் யோகேஷ், மாவட்டச் செயலாளர் சௌந்தர்ராஜ், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் வேணுகோபால், மாவட்ட இளைஞர் அணி தலைவர் கிருஷ்ண பிரசாத், மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், மண்டல் பொதுச் செயலாளர் குணசேகரன், முருகானந்தம், மண்டல் பொருளாளர் பிரதீப், மற்றும் மாநில பொறுப்பாளர்களும், மாவட்ட பொறுப்பாளர்களும், மாவட்ட அணி பிரிவு பொறுப்பாளர்களும், மண்டல் பொறுப்பாளர்களும், மண்டல் அணி பிரிவு பொறுப்பாளர்களும், மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நரசிம்மநாயக்கன்பாளையத்தைத் தொடர்ந்து ராக்கிபாளையம், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி பிரிவு உள்ளிட்ட பகுதிகளிலும் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சார நிகழ்வுகளில் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கமளிக்கப்பட்டது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...