கோவையில் செம்மொழி பூங்கா பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்; நகராட்சி, மாநகராட்சி காலிப் பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு

கோவையில் செம்மொழி பூங்கா பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆய்வு செய்தனர். நகராட்சி, மாநகராட்சி காலிப் பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.


Coimbatore: கோவை மத்திய சிறை மைதானத்தில் நடைபெற்று வரும் செம்மொழி பூங்கா பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் முத்துசாமி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது கோவை மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, "168 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சரின் உத்தரவின்படி, வரும் டிசம்பர் மாதம் பணிகள் முடிவடைந்து திறக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த ஆய்வை மேற்கொண்டோம்," என்றார்.



அமைச்சர் தொடர்ந்து பேசுகையில், "நகராட்சி, மாநகراட்சிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 2,500 பேருக்கு தேர்வு நடத்த உள்ளோம். இதில் 85 சதவீதம் பேருக்கு தேர்வு முறையிலும், 15 சதவீதம் பேருக்கு நேர்காணல் முறையிலும் ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளோம். விரைவில், பத்து நாட்களில் பொறியாளர்கள் உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்," என்று தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட 330 தீர்மானங்கள் குறித்தும் அமைச்சர் கருத்து தெரிவித்தார். "இந்தத் தீர்மானங்களை ஆராய்ந்து, மக்களுக்குத் தேவையானவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து அனைத்தையும் நிறைவேற்றுவோம்," என்றார்.



கோவை மேயர் நியமனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "இது தொடர்பாக முதலமைச்சர் சொல்வதைத்தான் அறிவிப்போம். இது குறித்து மதியம் தெரிவிப்போம்," என முடித்துக் கொண்டார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...