காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் போலி காவலர்கள் பூசாரியிடம் பணம் பறிப்பு - மூவர் கைது

கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் போலி காவலர்களாக நடித்து பூசாரியிடம் ரூ.10,000 பறித்த மூவர் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் போலி காவலர்களாக நடித்து பூசாரியிடம் பணம் பறித்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர், சின்ன கரும்பாலத்தைச் சேர்ந்த நித்தியானந்தம் (44) என்ற கோவில் பூசாரி, ஆகஸ்ட் 2 அன்று காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த மூவர் தங்களை காவலர்கள் என்று கூறி, அவரது பையை சோதனை செய்ய கேட்டனர். சோதனையின் போது பையிலிருந்த ரூ.10,000-ஐ எடுத்துக் கொண்டு, அருகில் உள்ள காவல் நிலையத்தில் விளக்கம் அளிக்குமாறு கூறிவிட்டு ஆட்டோவில் தப்பினர்.

இது குறித்து நித்தியானந்தம் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் புலியகுளம், மசால் லே-அவுட்டைச் சேர்ந்த கார்த்திக் (29), மதுரையைச் சேர்ந்த ஜோதிராஜ் (21), ஷேக் அப்துல்லா (21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் கார்த்திக் ஆட்டோ ஓட்டுநராகவும், ஜோதிராஜ் கோவையில் உள்ள ஒரு உணவகத்தில் புரோட்டா மாஸ்டராகவும் பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது. கைதான மூவரிடமிருந்து பறிக்கப்பட்ட ரூ.10,000 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...