கோவை மதுகரை அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்ற இருவர் கைது

கோவை மதுகரை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் இருவரை சோதனையிட்டதில், 150 கிராம் கஞ்சா மற்றும் 55 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: கோவை சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, ஆகஸ்ட் 2 ஆம் தேதி மதுக்கரை ரோட்டில் உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தார்.

சோதனையின் போது, அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் 55 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. உடனடியாக இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் கோவை சுந்தராபுரம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த மோகன் மகன் சிஜு (வயது 25) மற்றும் சிட்கோ சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த தேவராஜ் மகள் ஷர்மிளா (வயது 27) என அடையாளம் காணப்பட்டனர்.

விசாரணையில், சிஜு ஒரு லேத் ஒர்க் ஷாப்பில் டர்னராக வேலை செய்து வருவதும், ஷர்மிளா B.Com., C.A. படித்து முடித்து ஆடிட்டராக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து கஞ்சா, போதை மாத்திரைகள், எடை இயந்திரம், மூன்று செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். போதைப் பொருட்கள் விற்பனை செய்த இந்த இருவரும் எவ்வாறு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர், யாரிடமிருந்து இவற்றை பெற்றனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...