பங்கு சந்தை முதலீட்டில் ரூ.34 லட்சம் மோசடி: இரண்டு பேர் கைது

கோவையில் பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி ரூ.34 லட்சம் மோசடி செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 152 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.


Coimbatore: கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்த அருண் குமார் என்பவர் மாநகர சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். அதில், ஆன்லைனில் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்ற தகவல் அவருக்கு வந்ததாகவும், இதனை நம்பி அவர் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

லாபத்துடன் முதலீடு செய்வது தொடர்பான வீடியோவை வாட்ஸ்அப்பில் அனுப்பியதாகவும், பணம் அனுப்பினால் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டித் தருவதாகக் கூறியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனை நம்பி அருண் குமார் பல்வேறு தவணைகளாக ரூ.34 லட்சம் அனுப்பியுள்ளார்.

லாபத் தொகை குறித்துக் கேட்டபோது பணம் முதிர்வு அடைவதாகத் தெரிவித்ததாகவும், பின்னர் லாபத் தொகையையும் முதலீட்டுத் தொகையையும் திரும்பக் கேட்டபோது தராமல் மோசடி செய்துவிட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், செல்போன் எண்கள் மற்றும் பல்வேறு ஆன்லைன் தகவல்களின் அடிப்படையில் துடியலூரைச் சேர்ந்த தனசேகரன் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரவி சந்துரு ஆகிய இருவரை ஜூலை 1 அன்று கைது செய்தனர்.

கைதான இருவரிடமிருந்து பல்வேறு வங்கிகளின் நூற்றுக்கணக்கான காசோலைப் புத்தகங்கள், கிரெடிட் கார்டுகள், ஏ.டி.எம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில், பங்குச் சந்தையில் லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 152 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...