அருந்ததியர் இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தமிழ்ப்புலிகள் கட்சி வரவேற்பு

கோவையில் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் அருந்ததியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.


Coimbatore: கோவை பிரஸ் கிளப்பில் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் செய்தியாளர்களை சந்தித்து, அருந்ததியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றார்.

நாகை திருவள்ளுவன் கூறுகையில், "பட்டியல் பிரிவிற்குள் மிகவும் பின்தங்கி உள்ள அருந்ததியர் மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2009 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் அருந்ததியர்களுக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள், பட்டியல் பிரிவுக்கு உள்ளாகவே பின்தங்கியுள்ள மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கியிருப்பது செல்லும் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள்" என்றார்.



"திமுகவிற்கும், உள் இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடிய முற்போக்கு இயக்கங்களுக்கும், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த இயக்கங்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் கிடைத்துள்ள வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம்" என்று அவர் தெரிவித்தார். மேலும், "இந்த சட்டத்தை கொண்டு வந்த தலைவர் கலைஞருக்கும் இந்த சட்டம் செல்லும் என்ற நிலைக்கு வருவதற்கு உடன் இருந்த Makkaludan Mudhalvar ஸ்டாலினுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றும் கூறினார்.

நாளை காலை தமிழக முதல்வரை சந்தித்து இது குறித்து நன்றி தெரிவிக்க இருப்பதாகவும் நாகை திருவள்ளுவன் தெரிவித்தார். அதேசமயம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அந்தந்த சாதியின் அடிப்படையில் பிரதிநிதித்துவ இட ஒதுக்கீடு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்த இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...