நடுரோட்டில் பழுதான அரசு பேருந்தை தள்ளி இயக்கிய மாணவர்கள், பொதுமக்கள்

பொள்ளாச்சியில் நடுரோட்டில் பழுதடைந்த அரசு பேருந்தை மாணவர்களும் பொதுமக்களும் தள்ளி இயக்கினர். அடிக்கடி பழுதாகும் பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை.


கோவை: பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட 51A எண் கொண்ட அரசு பேருந்து, திருவள்ளுவர் திடல் அருகே திடீரென பழுதடைந்து நின்றது. பேருந்து ஓட்டுநர் பல முறை முயற்சி செய்தும் பேருந்து இயங்கவில்லை.



இதனால் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவர்கள் மற்றும் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சியினர் உட்பட பலரும் பேருந்தை பின்புறமாகவும், பின்னர் முன்புறமாகவும் தள்ளினர்.



இறுதியாக பேருந்து இயங்கத் தொடங்கியது.

பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை, நெகமம், பெதப்பம்பட்டி, ஆழியார் உள்ளிட்ட பகுதிகளுக்கு 50க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான பேருந்துகள் அடிக்கடி பழுதடைவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, பழுதடைந்த பேருந்துகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...