முன்னாள் படைவீரர்களுக்கு சொத்துவரி திருப்பி அளிப்பு - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் தங்கள் சொந்த வீட்டிற்கு செலுத்தும் சொத்துவரியை திரும்பப் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த சலுகை வழங்கப்படுகிறது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் தாங்கள் குடியிருக்கும் ஒரு சொந்த வீட்டிற்கு செலுத்தும் சொத்துவரியை முன்னாள் படைவீரர் நலத்துறை மூலமாக மீளப்பெற்றிட ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின்படி முன்னாள் படைவீரர் செலுத்தும் வீட்டுவரி ஒரு வருடத்திற்கு (2 அரையாண்டு) அதிகபட்சமாக ரூ.10,000/- அல்லது செலுத்தப்பட்ட தொகை இதில் எந்த தொகை குறைவோ அந்த தொகையினை, வீட்டுவரி செலுத்திய நாள் முதல் 6 மாத காலத்திற்குள் பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சலுகையை பெற சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. முன்னாள் படைவீரர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக குடியிருப்பவராக இருத்தல் வேண்டும். அவரது சொந்த வீட்டிற்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். முன்னாள் படைவீரர் வருமானவரி செலுத்துபவராக இருத்தல் கூடாது. இராணுவப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின் மறு வேலைவாய்ப்பு முறையில் அரசுத்துறைகளில் நிரந்தரமாக பணிபுரிபவர்கள் மற்றும் இந்த மறுவேலைவாய்ப்பு பணியில் இருந்து ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்த சலுகைக்கு தகுதியற்றவர்கள்.

மேலும், வீட்டுவரி செலுத்தப்படும் வீடு முன்னாள் படைவீரரின் பெயரில் மட்டுமே இருத்தல் வேண்டும். அரசாணை வெளியிடப்பட்ட நாளான 27.02.2024-க்கு பிறகு 2023-24 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டிற்கு செலுத்திய வீட்டுவரி முதல் மீளப்பெற்றுக் கொள்ளலாம்.

தகுதியுடைய முன்னாள் படைவீரர்கள் செலுத்திய வீட்டுவரி தொகையினை மீளப்பெற விரும்பினால், வீட்டுவரி செலுத்திய அசல் இரசீது, அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகலுடன் நேரில் வந்து உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...