கோவை மாநகராட்சி 1-வது வார்டில் பல்வேறு அபிவிருத்தி பணிகள்: கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் ஆய்வு

கோவை மாநகராட்சி 1-வது வார்டில் பாதாள சாக்கடை, சாலை சுத்தம், அங்கன்வாடி நடைபாதை மற்றும் வடிகால் சுத்தம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி பணிகளை வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் அபிவிருத்தி பணிகளை வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் நேரில் ஆய்வு செய்தார்.

அப்பநாயக்கன்பாளையம் ஈஸ்வர சக்தி நகர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணியினை கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் நேரில் பார்வையிட்டார். இப்பணியினை தரமாக செய்திட வேண்டுமென ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தினார்.



பார்க்சிட்டி பகுதியில் சாலையில் கழிவுகள் கொட்டப்பட்டதால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, கவுன்சிலர் நேரில் பார்வையிட்டு அந்த பகுதியை சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.



அப்பநாயக்கன்பாளையம் அங்கன்வாடி பள்ளியின் முன்புறம் குழந்தைகள் நடந்து செல்வதற்காக நடைபாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.



மேலும், வார்டு முழுவதும் வடிகால் சுத்தம் செய்யும் பணிகள் மற்றும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளை கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...