கோவையில் திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்

கோவை வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி சிறப்புரையாற்றினார்.


கோவை: கோவை மாவட்ட திமுக கழக அலுவலகத்தில் கோவை வடக்கு மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



அவருடன் மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் மாலதி நாகராஜ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரதி மனோகர், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ரங்கநாயகி ஆகியோரும் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அணிகளின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் மற்றும் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது என தெரிகிறது.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...

கோவையில் 4 பேர் கும்பல் தாக்கிய தொழிலாளி உயிரிழப்பு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிக...

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...