கோவை இடிகரை பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து

கோவை இடிகரை பேரூராட்சியில் 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு காருண்யம் பவுண்டேஷன் சார்பில் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வு பணியாளர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் நடைபெற்றது.


கோவை: கோவை இடிகரை பேரூராட்சியில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு அவர்களின் சேவையை பாராட்டும் வகையில் தனியார் தொண்டு நிறுவனமான காருண்யம் பவுண்டேஷன் சார்பில் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

காருண்யம் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு அவர்களின் சேவையை பாராட்டி ஒரு நேர உணவு வழங்கி வருகிறது.



இதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் மாவட்டம் இடிகரை முதல் நிலை பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு பணி முடிந்த பின் காருண்யம் பவுண்டேஷன் நிறுவனர் கிருஷ்ணாத்மா மதிய உணவாக பிரியாணி வழங்கினார்.



காருண்யம் பவுண்டேஷன் நிறுவனர் கிருஷ்ணாத்மா பேசுகையில், "நாம் அனைவரும் இந்த துப்புரவு பணியாளர் சமூகத்திற்கு மிகவும் கடமைப்பட்டவர்கள். அன்றாடம் நாம் ஒதுக்கும் குப்பைகளையும் கழிவுகளையும் தயக்கமின்றி அகற்றி தூய்மைப்படுத்தும் மகத்தான பணியினை அவர்கள் செய்து வருகிறார்கள். இவர்கள் இந்தப் பணியை ஒரு நாள் கூட செய்யாவிட்டால், நம்மால் எளிதில் கடந்து செல்ல முடியாது. நல்ல சுகாதாரத்துடன் வாழவும் இயலாது," என்றார்.

மேலும் அவர், "ஆண்டு முழுவதும் நமக்காக, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமுதாயம் நோயின்றி வாழ உதவும் இந்த துப்புரவு பணியாளர்களை கருத்தில் கொண்டு, இந்த ஒரு நாள் அவர்களுக்கு உணவு அளித்து சிறப்பிக்க காருண்யம் பவுண்டேஷன் முடிவு செய்தது. இதனால் ஒவ்வொரு ஊராட்சியிலும் இந்த நிகழ்வை நடத்தி வருகிறோம். எங்கள் நோக்கத்தை நிறைவேற்ற உதவிய பேரூராட்சி தலைவர் மற்றும் நிர்வாகத்தினர் அனைவருக்கும் நன்றி," என்று தெரிவித்தார்.

கோவை காருண்யம் பவுண்டேஷன் அறக்கட்டளை 2020 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு உணவு அளித்து உதவி வருகிறது. இந்த நிகழ்வில் இடிகரை பேரூராட்சித் தலைவர் ஜனார்த்தனன், துணைத் தலைவர் சேகர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். உணவு பெற்றுக்கொண்ட துப்புரவு பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...