கோவை இடிகரை பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து

கோவை இடிகரை பேரூராட்சியில் 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு காருண்யம் பவுண்டேஷன் சார்பில் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வு பணியாளர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் நடைபெற்றது.


கோவை: கோவை இடிகரை பேரூராட்சியில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு அவர்களின் சேவையை பாராட்டும் வகையில் தனியார் தொண்டு நிறுவனமான காருண்யம் பவுண்டேஷன் சார்பில் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

காருண்யம் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு அவர்களின் சேவையை பாராட்டி ஒரு நேர உணவு வழங்கி வருகிறது.



இதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் மாவட்டம் இடிகரை முதல் நிலை பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு பணி முடிந்த பின் காருண்யம் பவுண்டேஷன் நிறுவனர் கிருஷ்ணாத்மா மதிய உணவாக பிரியாணி வழங்கினார்.



காருண்யம் பவுண்டேஷன் நிறுவனர் கிருஷ்ணாத்மா பேசுகையில், "நாம் அனைவரும் இந்த துப்புரவு பணியாளர் சமூகத்திற்கு மிகவும் கடமைப்பட்டவர்கள். அன்றாடம் நாம் ஒதுக்கும் குப்பைகளையும் கழிவுகளையும் தயக்கமின்றி அகற்றி தூய்மைப்படுத்தும் மகத்தான பணியினை அவர்கள் செய்து வருகிறார்கள். இவர்கள் இந்தப் பணியை ஒரு நாள் கூட செய்யாவிட்டால், நம்மால் எளிதில் கடந்து செல்ல முடியாது. நல்ல சுகாதாரத்துடன் வாழவும் இயலாது," என்றார்.

மேலும் அவர், "ஆண்டு முழுவதும் நமக்காக, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமுதாயம் நோயின்றி வாழ உதவும் இந்த துப்புரவு பணியாளர்களை கருத்தில் கொண்டு, இந்த ஒரு நாள் அவர்களுக்கு உணவு அளித்து சிறப்பிக்க காருண்யம் பவுண்டேஷன் முடிவு செய்தது. இதனால் ஒவ்வொரு ஊராட்சியிலும் இந்த நிகழ்வை நடத்தி வருகிறோம். எங்கள் நோக்கத்தை நிறைவேற்ற உதவிய பேரூராட்சி தலைவர் மற்றும் நிர்வாகத்தினர் அனைவருக்கும் நன்றி," என்று தெரிவித்தார்.

கோவை காருண்யம் பவுண்டேஷன் அறக்கட்டளை 2020 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு உணவு அளித்து உதவி வருகிறது. இந்த நிகழ்வில் இடிகரை பேரூராட்சித் தலைவர் ஜனார்த்தனன், துணைத் தலைவர் சேகர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். உணவு பெற்றுக்கொண்ட துப்புரவு பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...