உடுமலை-மூணாறு சாலையில் மண்சரிவு: போக்குவரத்து துண்டிப்பு, வாகன ஓட்டிகள் பாதிப்பு

உடுமலை-மூணாறு சாலையில் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு, இரு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கவனமுடன் செயல்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறுக்கு செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

உடுமலையில் இருந்து மூணாறுக்கு செல்லும் சாலை ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதி வழியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக பஸ், சரக்கு மற்றும் இதர வாகன போக்குவரத்து தினசரி நடைபெற்று வருகிறது. தற்போது கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.



நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக, உடுமலை-மூணாறு சாலையில் மறையூருக்கும் மூணாறுக்கும் இடைப்பட்ட பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்து மண்சரிவு ஏற்பட்டது.



இதன் விளைவாக, இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.



உடுமலையில் இருந்து மூணாறு நோக்கி சென்ற வாகனங்கள் மறையூர் வரையில் மட்டுமே இயக்க முடிந்தது.

கேரள மாநிலத்தில் மழை தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இந்நிலையில், வனப்பகுதி வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த அசாதாரண சூழ்நிலையில், உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலை துண்டிப்பால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை விரைவில் களைய வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...