எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு கிருஷ்ணராஜபுரத்தில் கூடுதல் நிறுத்தம்

தெற்கு ரயில்வே, எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு கிருஷ்ணராஜபுரத்தில் கூடுதல் நிறுத்தம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை பயணிகளின் வசதிக்காக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தெற்கு ரயில்வே நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, எர்ணாகுளத்தில் இருந்து கோவை வழியாக பெங்களூர் செல்லும் வந்தே பாரத் ரயிலுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

எர்ணாகுளம் - பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே வாராந்திர அடிப்படையில் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் ஏற்கனவே திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் நின்று செல்கின்றன. தற்போது, பயணிகளின் வசதிக்காக கிருஷ்ணராஜபுரத்தில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அட்டவணையின்படி, ரயில் எண் 06001 எர்ணாகுளம் - பெங்களூரு கண்டோன்மென்ட் வந்தே பாரத் சிறப்பு ரயில் கிருஷ்ணராஜபுரத்தில் இரவு 9.05 மணிக்கு வந்து 9.07 மணிக்கு புறப்படும். அதேபோல, ரயில் எண் 06002 பெங்களூரு கண்டோன்மென்ட் - எர்ணாகுளம் வந்தே பாரத் சிறப்பு ரயில் கிருஷ்ணராஜபுரத்தில் காலை 5.40 மணிக்கு வந்து, 5.42 மணிக்கு புறப்படும்.

இந்த கூடுதல் நிறுத்தம் பயணிகளுக்கு மேலும் வசதியாக இருக்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...