மடத்துக்குளம் அருகே மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பொதுமக்கள் அவதி: அடிப்படை வசதிகள் இன்றி சிரமம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே தூங்காவி ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தில் திட்டமிடல் குறைபாடு காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். அடிப்படை வசதிகள் இன்மையும், போக்குவரத்து நெரிசலும் மக்களை அவதிக்குள்ளாக்கியது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே தூங்காவி ஊராட்சியில் உள்ள முருகன் திருமண மண்டபத்தில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது. துங்காவி, தாந்தோணி, மெட்ராத்தி ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.



இந்நிகழ்வில் மடத்துக்குளம் வருவாய் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினரின் சரியான திட்டமிடல் இல்லாததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மண்டபம் பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



மேலும், துங்காவியில் இருந்து கோட்டமங்கலம் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நிகழ்வுக்கு வந்த பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில், விபரம் அறிந்து வந்த வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந் கண்ணன், பொதுமக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, அவர்களுக்கு டோக்கன் வழங்கினார். மேலும், உடுமலை பகுதியில் இருந்து தேவையான கூடுதல் இ-சேவை மையங்களை துங்காவி கிராமத்திற்குக் கொண்டு வந்தார்.



இலவச வீட்டுமனை, பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், மகளிர் உரிமைத் தொகை கோரி அதிக அளவிலான மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். ஆனால், அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முக்கியமான துறை அதிகாரிகள் வராததால் பல பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...