தாராபுரம் அருகே ரூ.8 லட்சம் மதிப்பிலான புதிய சமையல் கூடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் அடுத்த சேடபாளையம் அரசு மாதிரி பள்ளியில் ரூ.8 லட்சம் மதிப்பிலான புதிய சமையல் கூடத்தை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பல்வேறு அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் அடுத்துள்ள சேடபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட சமையல் கூடத்தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.

இந்த அரசு மாதிரி பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதுவரை சமையல் கூடம் இல்லாமல் இருந்த இந்தப் பள்ளிக்கு, தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமையல் கூடம் கட்டப்பட்டது.



அமைச்சர் கயல்விழி செல்வராஜ் புதிய சமையல் கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றினார். அதன் பின்னர், புதிதாக கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு அறையையும் பார்வையிட்டார். இந்நிகழ்வில் ருத்ராவதி பேரூர் கழக செயலாளர் அன்பரசு முன்னிலை வகித்தார்.

இந்த திறப்பு விழாவில் பேரூராட்சி கவுன்சிலர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதிகள் தங்கவேல், நந்தகோபால், வார்டு பிரதிநிதி ரமேஷ், ராமகிருஷ்ணன், இளைஞர் அணி கனகசபாபதி, விஸ்வநாதன், கோகுலகிருஷ்ணன், கார்த்திக், செல்வகுமார் மற்றும் அரசு மாதிரி பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...