மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் 31வது ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா தொடக்கம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் 31வது ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் ஜூலை 30ஆம் தேதி நடைபெறவுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் 31வது ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஜூலை 23ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கிய இந்த திருவிழா, இன்று (ஜூலை 28) கொடியேற்றத்துடன் முறைப்படி தொடங்கியது.

திருவிழாவின் தொடக்கமாக, கடந்த சில நாட்களாக வனபத்ரகாளியம்மனுக்கு தினந்தோறும் அபிஷேக அலங்கார பூஜைகள், இலட்சார்ச்சனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இன்று காலை நடைபெற்ற கொடியேற்று விழாவில், தேக்கம்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பாக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

கோவில் வளாகத்தில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில், சிம்மவாகனத்தில் அம்மனின் உருவம் பொறித்த கொடியை, தேக்கம்பட்டி ஊர் கவுடர் திருநவுக்கரசு முன்னிலையில் கோவில் கொடிமரத்தில் ஏற்றி வைத்தனர். இந்த நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர்.

ஆடிக்குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்வு வருகின்ற ஜூலை 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனின் அருளைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வனபத்ரகாளியம்மன் கோவில் திருவிழா மேட்டுப்பாளையம் பகுதி மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு 31வது முறையாக நடைபெறும் இந்த திருவிழா, பாரம்பரியத்தையும் பக்தியையும் ஒருங்கிணைக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...