கோவை TNAU-வில் இளமறிவியல் மாணவர் சேர்க்கை: பொதுப்பிரிவு மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கு நேரடி கலந்தாய்வு

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கு பொதுப்பிரிவு மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கான நேரடி கலந்தாய்வு ஜூலை 30ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 171 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும்.



கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) இன்று (ஜூலை 27) வெளியிட்ட செய்திக்குறிப்பில், இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கு பொதுப்பிரிவு (Academic Stream) மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டிலுள்ள காலியிடங்களுக்கு நேரடி கலந்தாய்வு (Offline Counseling) நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நேரடி கலந்தாய்வு ஜூலை 30, 2024 (செவ்வாய்கிழமை) அன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெறும். மொத்தம் 171 இடங்களுக்கு இந்த கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.

நேரடி கலந்தாய்வில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்கள் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கும் மற்றும் அலைபேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அந்த மின்னஞ்சலில் கல்லூரி வாரியாக உள்ள காலியிடங்களுக்கான அட்டவணையும் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், நேரடி கலந்தாய்வில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் மற்றும் கல்லூரி வாரியாக உள்ள காலியிடங்களுக்கான அட்டவணை ஆகியவை https://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. நேரடி கலந்தாய்வில் கலந்து கொள்ள தவறியவர்களுக்கு மறு பரிசீலனை செய்யப்படமாட்டாது என்றும் பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.

மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும், 9488635077, 9486425076 என்ற அலைபேசி எண்களிலும் வாரநாட்களில் காலை 9.00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...