கோவை காவல்துறை அதிகாரிகளுக்கு 9 மி.மீ பிஸ்டல் துப்பாக்கி சூடும் பயிற்சி

கோவை அவினாசி ரோடு காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் 71 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு 9 மி.மீ பிஸ்டல் துப்பாக்கி சூடும் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சி கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனின் அறிவுறுத்தலின் பேரில் நடத்தப்பட்டது.


கோவை: கோவை அவினாசி ரோடு காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு துப்பாக்கி பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சி கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனின் அறிவுறுத்தலின் பேரில் நடத்தப்பட்டது.

கோவை ரைபிள் கிளப்பில் நடைபெற்ற இப்பயிற்சியில், எஸ்.ஐ முதல் ஏ.சி., எஸ்.பி வரையிலான கோவை மாநகர காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இவர்களுக்கு 9 மி.மீ பிஸ்டல் துப்பாக்கி சூடும் பயிற்சி அளிக்கப்பட்டது.



இப்பயிற்சியில் மொத்தம் 71 பேர் பங்கேற்றனர். இதில் 9 ஏ.சி. எஸ்.பி., 22 இன்ஸ்பெக்டர்கள், மற்றும் 40 எஸ்.ஐ.க்கள் அடங்குவர்.



பயிற்சிக்கு முன்னதாக, பங்கேற்பாளர்களுக்கு துப்பாக்கி தொடர்பான அடிப்படை விஷயங்கள் குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது.



கடந்த சில நாட்களுக்கு முன்னர், பங்கேற்பாளர்களுக்கு துப்பாக்கியின் பாகங்களை பிரித்து இணைத்தல், துப்பாக்கியை ஏற்றுதல் மற்றும் இறக்குதல், இலக்கு பார்த்து சுடுதல், துப்பாக்கியை சுத்தம் செய்தல் மற்றும் பராமரித்தல், மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...