கோவையில் திமுக உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன

கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் புதிய கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று (ஜூலை 25) புதிய கழக உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் இந்த அட்டைகளை வழங்கினார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழகத்தின் பவள விழா ஆண்டை முன்னிட்டு இந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.



புதிய கழக உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து தலைமைக்குக் கொடுத்தவர்களுக்கு இந்த அட்டைகள் வழங்கப்பட்டன.



கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, பெரிய கடைவீதி பகுதி-2, காந்திபுரம் பகுதி ஆகிய இடங்களைச் சேர்ந்த வட்டக்கழகச் செயலாளர்கள் நா.தங்கவேல், ஏ.அப்பாஸ், விஜயகுமார், கே.ராமநாதன், எஸ்.போஸ் ஆகியோருக்கு இந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.



காந்திபுரம் பகுதிச் செயலாளர் ஆர்.எம்.சேதுராமன், பெரியகடை வீதி பகுதி-2 செயலாளர் வி.ஐ.பதுருதீன் ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர். மேலும், பெரிய கடைவீதி பகுதி-2, காந்திபுரம் பகுதிக்கழக, வட்டக்கழக அனைத்து நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், கழக செயல்வீரர்கள், BLA-2 பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...