கோவையில் திமுக உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன

கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் புதிய கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று (ஜூலை 25) புதிய கழக உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் இந்த அட்டைகளை வழங்கினார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழகத்தின் பவள விழா ஆண்டை முன்னிட்டு இந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.



புதிய கழக உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து தலைமைக்குக் கொடுத்தவர்களுக்கு இந்த அட்டைகள் வழங்கப்பட்டன.



கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, பெரிய கடைவீதி பகுதி-2, காந்திபுரம் பகுதி ஆகிய இடங்களைச் சேர்ந்த வட்டக்கழகச் செயலாளர்கள் நா.தங்கவேல், ஏ.அப்பாஸ், விஜயகுமார், கே.ராமநாதன், எஸ்.போஸ் ஆகியோருக்கு இந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.



காந்திபுரம் பகுதிச் செயலாளர் ஆர்.எம்.சேதுராமன், பெரியகடை வீதி பகுதி-2 செயலாளர் வி.ஐ.பதுருதீன் ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர். மேலும், பெரிய கடைவீதி பகுதி-2, காந்திபுரம் பகுதிக்கழக, வட்டக்கழக அனைத்து நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், கழக செயல்வீரர்கள், BLA-2 பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...