அரசு தேர்வுகளில் வெற்றி பெற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அரசு போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற உதவும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அரசு போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் பொருட்டு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஏனைய அரசு தேர்வாணையங்களால் நடத்தப்படும் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி அடைவதற்கு இந்த பயிற்சி வகுப்புகள் உதவும் என்று அவர் கூறினார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலமாக அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு போட்டித்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். முதற்கட்டமாக 100 மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு மற்றும் தங்கும் விடுதி வசதியுடன் கூடிய இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 1, 2024 அன்று காலை 10.00 மணியளவில் சென்னையில் உள்ள சி.எஸ்.ஜ காது கேளாதோருக்கான மேல்நிலைப்பள்ளியில் தொடங்கவுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தை சார்ந்த விரும்பமுள்ள மாற்றுதிறனாளிகள் ஜூலை 29, 2024-க்குள் விண்ணப்பங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு மாற்றுத்திறனாளிகள் அரசு வேலைகளில் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...