கோவை புதூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகள் கொள்ளை

கோவை புதூர் காமாட்சி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் இந்த கொள்ளை நடந்துள்ளது.


Coimbatore: கோவை புதூர் காமாட்சி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை புதூர் காமாட்சி நகரை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி கீதா (72). கீதா கடந்த ஜூலை 22ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், ஜூலை 24 மாலை கீதாவின் வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை வேலைக்காரப் பெண் முத்துலட்சுமி கண்டுபிடித்தார். உடனடியாக அவர் கீதாவுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் வீட்டை சோதித்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கீதா குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.

இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...