எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக ஒன்றிணைப்பு குறித்தும், 2026 தேர்தல் முடிவுகள் பற்றியும், மத்திய பட்ஜெட் குறித்தும் தனது கருத்துக்களை வெளியிட்டார்.


அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக ஒன்றிணைப்பு குறித்தும், வரவிருக்கும் 2026 தேர்தல் முடிவுகள் பற்றியும், சமீபத்திய மத்திய பட்ஜெட் குறித்தும் தனது கருத்துக்களை வெளியிட்டார்.

அதிமுக ஒன்றிணைப்பு குறித்து பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி என்ற சுயநலவாதி இருக்கும் வரை அதிமுக ஒருங்கிணைய வாய்ப்பில்லை" என்று கூறினார். எனினும், ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2026 தேர்தல் குறித்து பேசும்போது, "2026-ல் தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்" என்று தனது கணிப்பை வெளியிட்டார்.

சமீபத்திய மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், "இந்த பட்ஜெட் ஏழை எளிய மக்கள், விவசாயிகள், இளைஞர்கள், தாய்மார்கள் இவர்கள் முன்னேற்றத்துக்கான பட்ஜெட்" என்று கூறினார். மேலும், இது வேலைவாய்ப்பு, மாணவர்களின் கல்வி கடன், விவசாயிகள் பொருளாதார முன்னேற்றம் மற்றும் நாட்டின் வல்லரசு நிலையை மேம்படுத்தும் பட்ஜெட் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், "தமிழ்நாட்டிற்கு சிறப்பு திட்டம் இல்லை என்ற ஒரு எதிர்பார்ப்பு மட்டுமே உள்ளது" என்றும், இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கான பட்ஜெட் என்றும் அவர் தனது கருத்தை முடித்துக் கொண்டார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...