கோவை ஆவாரம்பாளையத்தில் பெண்ணிடம் 9 சவரன் தங்க நகைகள் பறிப்பு - போலீசார் விசாரணை

கோவை ஆவாரம்பாளையத்தில் வீட்டுக்குள் புகுந்த இரண்டு வாலிபர்கள் பெண்ணிடம் வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து 9 சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்றனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள இளங்கோ நகரில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்த இரண்டு வாலிபர்கள், பெண்ணிடம் வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து 9 சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் சின்ன Dharapuram பகுதியைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள இளங்கோ நகரில் தனது மகன் மற்றும் மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் தனது வீட்டு வேலைகளை கவனித்து வந்தபோது, ராஜலட்சுமியின் வீட்டுக்குள் புகுந்த இரண்டு அடையாளம் தெரியாத வாலிபர்கள் வீடு வாடகைக்கு இருக்கிறதா என்று கேட்டுள்ளனர்.

அதற்கு ராஜலட்சுமி இது தொடர்பாக வீட்டு உரிமையாளரிடம் தான் பேச வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் ராஜலட்சுமி அணிந்திருந்த ஏழு சவரன் தாலி மற்றும் இரண்டு சவரன் தங்க சங்கிலி என மொத்தம் ஒன்பது சவரன் தங்க நகைகளை பறித்தனர். தன்னிடம் நகை பறிக்கப்பட்டதாக ராஜலட்சுமி கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் இரண்டு வாலிபர்களும் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பினர்.

இது தொடர்பாக பீளமேடு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் வாலிபர்களை பிடிக்க தனிப்படை அமைத்துள்ள போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பட்டப் பகலில் நகையைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலிபர்கள் இருவரும் தனியாக உள்ள பெண்ணின் வீட்டை நோட்டமிட்டு நகைப் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...