கோவை - லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும்

கோவையில் இருந்து புறப்படும் லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் பொறியியல் பணிகள் காரணமாக இன்று 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இரயில் காலை 11 மணிக்கு புறப்படும்.


Coimbatore: கோவையில் இருந்து புறப்படும் லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் இரயில் இன்று 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வண்டி எண் 11014, கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி வழியாகச் செல்லும் லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் இன்று ஜூலை 24 காலை 8.50 மணிக்கு கோவை ஜங்சனில் இருந்து புறப்படுவதாக இருந்தது.

ஆனால், பொறியியல் பணிகள் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் 2 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக காலை 11 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாமதம் இன்று ஒரு நாள் மட்டுமே என்றும், வழக்கமான அட்டவணைப்படி நாளை முதல் இரயில் இயக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் இந்த மாற்றத்தை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...