கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து; ரூ.1 கோடி நன்கொடை

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இளைஞர் நலனுக்காக ரூ.1 கோடி நன்கொடை வழங்கினார்.


கோவை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்ல பழனிசாமி அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இளைஞர் நலனுக்காகவும் விளையாட்டு மேம்பாட்டுக்காகவும் பலவிதமான திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகளை டாக்டர் நல்ல பழனிசாமி பாராட்டினார். இளைஞர்களின் திறனை தூண்டும் பலவிதத் திட்டங்களுக்காக KMCH சார்பிலும், Dr NGP Institute சார்பிலும், ரூ. 1 கோடி நன்கொடையாக அளித்தார்.

இந்த சந்திப்பின் போது, கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு கோவை மக்கள் சார்பில் டாக்டர் நல்ல பழனிசாமி தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்த சந்திப்பின்போது கேஎம்சிஹெச் மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி எஸ். கார்த்திகேயன் உடனிருந்தார்.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தை முன்னிட்டும், புற்றுநோய் முதலான நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் கேஎம்சிஹெச் மருத்துவமனை வருடங்களுக்கு மேலாக மாரத்தான் ஓட்டப்பந்தய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...