வரும் பட்ஜெட்டில் தொழில்துறை கோரிக்கைகளை நிறைவேற்ற காட்மா வேண்டுகோள்

கோவையில், வரும் பட்ஜெட்டில் தொழில்துறை கோரிக்கைகளை நிறைவேற்ற காட்மா சங்கத் தலைவர் சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். முத்ரா கடன் உச்சவரம்பு உயர்வு, தொழிற்பூங்காக்கள் அமைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை வரவேற்றுள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) தலைவர் சிவக்குமார், வரும் பட்ஜெட்டில் தொழில்துறை விடுத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று (ஜூலை 22) வெளியிடப்பட்ட அறிக்கையில், தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சில முக்கிய திட்டங்களை காட்மா சங்கம் வரவேற்றுள்ளதாக சிவக்குமார் தெரிவித்தார். முத்ரா கடன்களுக்கான உச்ச வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுவதும், நெருக்கடிக் காலத்தில் தொழில்களை ஊக்குவிக்க கடன் வழங்கும் அளவு ரூ.100 கோடியாக அதிகரிக்கப்படுவதும் இதில் அடங்கும்.

தொழில் முனைவோர்களின் தொழில் வளர்ச்சி மற்றும் சொத்து மதிப்பின் அடிப்படையில் கடன் மதிப்பீடு செய்யப்படும் என்ற அறிவிப்பையும் சிவக்குமார் பாராட்டினார். மேலும், நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படும் என்ற திட்டத்தையும், அரசு-தனியார் பங்களிப்புடன் தொழிலாளர் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் என்ற முடிவையும் அவர் வரவேற்றார்.

பொதுத்துறை நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிருப்பு பயிற்சி அளிக்கப்படும் என்ற அறிவிப்பும், 1000 புதிய தொழிற்பயிற்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும் என்ற திட்டமும் பாராட்டப்பட்டன. தாயிரம், இரும்பு உள்ளிட்ட 20 வகையான ஸ்கிராப் பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கப்பட்டது.

இருப்பினும், நுகர்வோர்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் வரிவிகிதக் குறைப்பு, வங்கிக் கட்டண விகிதங்களில் குறைப்பு, நாடு முழுவதும் ஒரே சீரான விலையில் மூலப் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்தல் ஆகிய கோரிக்கைகளை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றித்தர வேண்டும் என்று சிவக்குமார் வலியுறுத்தினார். இந்த நடவடிக்கைகள் தொழில்முனைவோர்களுக்கு பெரிதும் உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...