கோவை போத்தனூர் உலர் பழ வியாபாரி வீட்டில் ரூ.2.35 லட்சம் கொள்ளை

கோவை போத்தனூரில் உலர் பழ வியாபாரி வீட்டில் ரூ.2.35 லட்சம் பணம், 3 கைக்கடிகாரங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளர் திருமண விழாவிற்கு சென்றிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.


Coimbatore: கோவை போத்தனூரைச் சேர்ந்த உலர் பழ வியாபாரி முகமது இஸ்மாயில் (வயது 46) வீட்டில் ரூ.2.35 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

முகமது இஸ்மாயில் கடந்த ஜூலை 19ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சேலத்தில் உள்ள உறவினர் இல்ல திருமண விழாவில் பங்கேற்க சென்றுள்ளார். ஜூலை 22ஆம் தேதி திரும்பி வந்த போது, வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் பணம், 3 கைக்கடிகாரங்கள் ஆகியவை காணாமல் போயிருந்தன. இது குறித்து முகமது இஸ்மாயில் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...