உடுமலை அருகே குடிநீர் கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

உடுமலை அருகே கொண்டம்பட்டி ஊராட்சியில் முறையான குடிநீர் வழங்கக் கோரி 100க்கும் மேற்பட்ட மக்கள் காலி குடங்களுடன் திருப்பூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் ஒன்றியம் கொண்டம்பட்டி ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊராட்சிக்கு திருமூர்த்தி அணை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள், குடிநீர் வழங்கல் துறையிடம் பொதுமக்கள் பலமுறை நேரில் சென்று முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு வழங்கியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.



இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் இன்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடுமலை-திருப்பூர் பிரதான சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி, குடிமங்கலம் காவல் ஆய்வாளர் கீதா, குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் உடனடியாக இன்று தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் தற்காலிகமாக சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

எனினும், முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்றால் மீண்டும் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக பொதுமக்கள் எச்சரித்துள்ளனர். உடுமலை அருகே முறையாக குடிநீர் வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் உடுமலை-திருப்பூர் சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...