தாராபுரம் அருகே அமைச்சர் கயல்விழி புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சர் கயல்விழி ரூ.1.05 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். இதில் தானிய கிடங்கு மற்றும் சமுதாய நலக்கூடம் அடங்கும்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை அமைச்சர் கயல்விழி திறந்து வைத்தார்.

குங்குமம்பாளையம் கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட தானிய கிடங்கை அமைச்சர் திறந்து வைத்தார். அதேபோல், புது ஐயப்பநாயக்கன்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் ரூ.85 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தையும் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராணா பத்மநாபன், வட்டாட்சியர் கோவிந்தசாமி, நந்தவனம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் தனலட்சுமி நாச்சிமுத்து, வேலாயுதம் பாளையம் பஞ்சாயத்து தலைவர் மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கட்சி நிர்வாகிகள், துறை சார்ந்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...