தாராபுரம் அருகே அமைச்சர் கயல்விழி புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சர் கயல்விழி ரூ.1.05 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். இதில் தானிய கிடங்கு மற்றும் சமுதாய நலக்கூடம் அடங்கும்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை அமைச்சர் கயல்விழி திறந்து வைத்தார்.

குங்குமம்பாளையம் கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட தானிய கிடங்கை அமைச்சர் திறந்து வைத்தார். அதேபோல், புது ஐயப்பநாயக்கன்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் ரூ.85 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தையும் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராணா பத்மநாபன், வட்டாட்சியர் கோவிந்தசாமி, நந்தவனம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் தனலட்சுமி நாச்சிமுத்து, வேலாயுதம் பாளையம் பஞ்சாயத்து தலைவர் மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கட்சி நிர்வாகிகள், துறை சார்ந்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...