தாராபுரம் அருகே அமைச்சர் கயல்விழி புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சர் கயல்விழி ரூ.1.05 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். இதில் தானிய கிடங்கு மற்றும் சமுதாய நலக்கூடம் அடங்கும்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை அமைச்சர் கயல்விழி திறந்து வைத்தார்.

குங்குமம்பாளையம் கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட தானிய கிடங்கை அமைச்சர் திறந்து வைத்தார். அதேபோல், புது ஐயப்பநாயக்கன்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் ரூ.85 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தையும் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராணா பத்மநாபன், வட்டாட்சியர் கோவிந்தசாமி, நந்தவனம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் தனலட்சுமி நாச்சிமுத்து, வேலாயுதம் பாளையம் பஞ்சாயத்து தலைவர் மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கட்சி நிர்வாகிகள், துறை சார்ந்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...