கோவை மேற்கு புறவழிச்சாலை: இரண்டாம் கட்ட பணிகளுக்கு ரூ.300 கோடி மதிப்பீடு - அனுமதிக்காக காத்திருப்பு

கோவை மேற்கு புறவழிச்சாலையின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு ரூ.300 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் இப்பணிகள், போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் மேற்கு புறவழிச்சாலையின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு ரூ.300 கோடி மதிப்பீட்டில் அனுமதி கோரப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்காக, பாலக்காடு சாலையில் மதுக்கரை அருகே மைல்கல் பகுதியில் தொடங்கி, நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் முடியும் வகையில் 32.43 கி.மீ நீளத்திற்கு மேற்குப்புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை 15 வருவாய் கிராமங்கள் வழியாக செல்லும்.

முதல் கட்டமாக 11.80 கி.மீ தூரத்திற்கு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுவரை 25 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. 5 கி.மீ தூரத்திற்கு சாலை ஏற்படுத்தப்பட்டு, 2 கி.மீ தூரத்திற்கு தார் சாலை அமைக்கும் அளவுக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது கட்டமாக 12.10 கி.மீ தூரத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. கலிக்கநாயக்கன்பாளையம் மற்றும் வடவள்ளி ஆகிய கிராமங்களில் 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்த பணிகளை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கவும், சோமையம்பாளையத்தில் நிலம் கையகப்படுத்தும் பணியை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மூன்றாவது கட்டமாக 8.52 கி.மீ தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த கூடுதலாக ஆறு மாதங்கள் தேவைப்படும். இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டத்திற்கான நிலம் கையகப்படுத்த தேவையான நிதியை தமிழக அரசு ஏற்கனவே ஒதுக்கியுள்ளது.

இரண்டாவது கட்டத்தில் சாலை அமைக்க ரூ.300 கோடி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிர்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதி பெற ஆறு மாதங்கள் ஆகலாம் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதல் கட்டப் பணிகள் முடிவதற்குள் இரண்டாவது கட்டத்திற்கான பூர்வாங்க வேலைகளை செய்தால், மேற்குப்புறவழிச்சாலை பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...