கோவையில் மூதாட்டி தன்னை கருணை கொலை செய்ய அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

கோவையில் 70 வயது மூதாட்டி வசந்தா, நகை மோசடி வழக்கில் போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் கருணை கொலை அல்லது தற்கொலைக்கு அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 70 வயதான மூதாட்டி வசந்தா என்பவர் தன்னை கருணை கொலை அல்லது தற்கொலை செய்ய அனுமதிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கோயம்புத்தூர் கே.ஜி. போஸ் நகரைச் சேர்ந்த வசந்தா, தனது மனுவில் கூறியிருப்பதாவது: "விமலா கீர்த்தி உள்ளிட்ட நான்கு பேர் சேர்ந்து என்னிடமிருந்து 14 பவுன் நகை வாங்கி மோசடி செய்தனர். இது குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், முறையான விசாரணை நடத்தாமல் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க முயற்சி நடக்கிறது."

"குற்றவாளிகளுக்கு சாதகமாக குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக உள்ள காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், "மாநகர காவல் ஆணையர் சிங்காநல்லூர் காவல் நிலைய அதிகாரிகளை நேரில் அழைத்து எச்சரிக்கை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனி எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. எனவே, என்னை கருணை கொலை அல்லது தற்கொலை செய்ய அனுமதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்," என்று தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த சம்பவம் கோவை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர்கள் இது போன்ற சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றும், முதியோர்களுக்கு உரிய பாதுகாப்பும் நீதியும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...