பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை தொடங்கக் கோரி DYFI அமைப்பினர் போராட்டம்

கோவையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு DYFI அமைப்பினர் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை உடனடியாக தொடங்கக் கோரி போராட்டம் நடத்தினர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Coimbatore: கோவையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை உடனடியாக தொடங்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் போராட்டம் நடைபெற்றது. கோவை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

DYFI கோவை மாவட்டச் செயலாளர் அர்ஜுன் கூறுகையில், "ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் விலை உயர்வுக்குப் பின்பு, சுமார் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறியுள்ளனர். ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் வழங்கும் 900 ரூபாய் பேக்கேஜை பி.எஸ்.என்.எல். 400 ரூபாய்க்கு வழங்க முடியும். ஆனால், இன்றுவரை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி சேவைகள் வழங்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.



மேலும் அவர், "நீண்டகால போராட்டத்திற்குப் பிறகு சென்னையில் உள்ள ஒரு கிராமத்தில் மட்டுமே பி.எஸ்.என்.எல். 4ஜி டவர் நிறுவப்பட்டுள்ளது. தற்போது டாடா நிறுவனத்திடம் இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. அரசால் செய்ய முடியாததை தனியார் செய்ய முடியும் என்று அரசு கருதினால், இந்த அரசு மக்களுக்கானதா அல்லது தனியாருக்கானதா என்ற கேள்வி எழுகிறது" என்றார்.



"தனியாருக்கு டெண்டர் விடுவதை தவிர்த்து, அரசே அதற்கான நடவடிக்கை எடுத்து மக்களுக்கு தீர்வு காண வேண்டும். பொதுத்துறையை பாதுகாக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், நாடு முழுவதும் DYFI சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்" என்று அர்ஜுன் எச்சரித்தார்.

Newsletter

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...