உடுமலையில் இருசக்கர வாகனத்தில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பு: வனத்துறையினர் மீட்பு

உடுமலை நேரு வீதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய விவசாயியின் இருசக்கர வாகனத்தில் கொம்பேறி மூக்கன் பாம்பு புகுந்துள்ளது. வனத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி பாம்பை மீட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பிரதான சாலையான நேரு வீதியில் தனியார் மருத்துவமனை, அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இந்த பரபரப்பான பகுதியில், ஒரு விவசாயி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார்.

சிகிச்சை முடிந்து திரும்பும் போது, அவரது இருசக்கர வாகனத்தில் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உடுமலை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.



வாகனத்தில் புகுந்திருந்த பாம்பை மீட்க வனத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடினர்.



இறுதியில் மீட்கப்பட்ட பாம்பு கொம்பேறி மூக்கன் வகையைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. பின்னர், பிடிக்கப்பட்ட பாம்பை அடர்ந்த வனப் பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.

தற்போது பருவ மழைக்காலம் என்பதால், சாலையின் இரு ஓரங்களிலும் பூக்கள் மற்றும் செடிகள் முளைத்து புதர் மண்டி உள்ளது. இதனால் பாம்பு மற்றும் தேள்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வாகன ஓட்டிகள் புதர்களுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும், வாகனங்களை இயக்கும் முன்பு கவனமாக பரிசோதித்து விட்டு பயணிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...