கோவையில் அடிப்படை வசதிகள் கோரி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கோவை மாநகராட்சியின் 84வது வார்டில் அடிப்படை வசதிகள் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை பொதுமக்கள் சூழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலை, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை வசதிகள் கோரி போராட்டம் நடத்தினர்.


Coimbatore: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 84வது வார்டில், அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வு செய்வதற்காக வந்த அரசு அதிகாரிகளை, குடியிருப்பு வாசிகள் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகராட்சியின் 84வது வார்டில் உள்ள ஜிஎம் நகர், கோட்டை புத்தூர் ஜமீன்தார் நகர், வைரம் நகர், வீரபாண்டி நகர், கல்லுக்குழி, சன் கார்டன், என்எஸ் கார்டன், ரோஜா கார்டன், காந்திநகர், ஜன்னத்துல் பிர்தௌஸ் கார்டன், கேஎஸ் பார்க் போன்ற பகுதிகளில் சாலை வசதி, மழை நீர் வடிகால், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தர வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் மறியல் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.



இந்நிலையில் அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் இந்த பகுதிகளை ஆய்வு செய்வதற்காக இன்று நேரில் வந்தனர். அப்போது அதிகாரிகளை சூழ்ந்து கொண்ட குடியிருப்பு வாசிகள், அவர்களை கையோடு அழைத்துச் சென்று சேதமடைந்த சாலைகள் மற்றும் கால்வாய்களை சுட்டிக்காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



பின்னர் 88வது வார்டு எஸ்டிபிஐ கவுன்சிலர் வீட்டின் முன்பாக பொதுமக்கள் கூடவே, அங்கு கவுன்சிலரின் ஆதரவாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினர் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அடிப்படை வசதிகள் அமைத்து தர ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...