தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையே புதிய இருவார வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை அறிமுகம்

ஜூலை 20, 2024 முதல் தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையே புதிய இருவார வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்படுகிறது. இந்த ரயில் வாரத்தில் இரு முறை இயக்கப்படும்.


கோவை: தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையே புதிய இருவார வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த ரயில் சேவை ஜூலை 20, 2024 முதல் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் எண் 16766 தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இருவார வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயில், வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை தோறும் இரவு 10.50 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.40 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடையும். திரும்பும் வழியில், ரயில் எண் 16765 மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இருவார வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயில், வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 7.35 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்.

இந்த ரயிலில் ஒரு AC 2-Tier பெட்டி, இரண்டு AC 3-Tier பெட்டிகள், ஒன்பது Sleeper Class பெட்டிகள், நான்கு பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், மற்றும் இரண்டு சாமான் மற்றும் பிரேக் வேன்கள் இடம்பெறும். இந்த ரயில் இரு திசைகளிலும் கோயம்புத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...