உடுமலையில் வண்டல் மண் அனுமதி கோரி விவசாயிகள் போராட்டம்

உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். வருவாய்த் துறையின் பாரபட்சம் குறித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதன்போது அதிகாரிகளுடன் வாக்குவாதமும் ஏற்பட்டது.

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை, வாளவாடி, சாப்பிட்டியார்குளம் உட்பட பல்வேறு நீர் நிலைகளில் மாவட்ட நிர்வாகம் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியது.



ஆனால், வருவாய்த் துறையினர் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயிகள் கூறுகையில், "உடுமலை பகுதியில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அரசின் விதிப்படி தேவையான ஆவணங்களை முறையாக சமர்ப்பித்தும் வருவாய்த்துறையினர் எந்த காரணமும் சொல்லாமல் விவசாயிகள் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளனர். வண்டல் மண் எடுப்பதற்கு தொடர்ந்து பாரபட்சம் காட்டிக் கொண்டிருப்பதால், அனைவருக்கும் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை மனு வழங்கியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்," என்றனர்.

மேலும், "வண்டல் மண் எடுக்க விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்," என அவர்கள் எச்சரித்தனர்.



பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், டிஎஸ்பி சுகுமாரன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...