கோவை திருவள்ளுவர் நகரில் காட்டு யானைகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்

கோவை திருவள்ளுவர் நகரில் இரண்டு காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து உலா வந்தன. ஒரு யானை குடியிருப்பாளர்களை தாக்க முயன்றது. வனத்துறையினரின் உடனடி நடவடிக்கை தேவை என பொதுமக்கள் கோரிக்கை.


Coimbatore: கோவை மாவட்டம் தடாகம், மாங்கரை, கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

நேற்று இரவு திருவள்ளுவர் நகர் பகுதிக்கு வந்த இரண்டு காட்டு யானைகள் ஊருக்குள் உலா வந்தன. இந்த சமயத்தில், ஒரு வீட்டின் முன் கேட்டில் நின்றுகொண்டிருந்த குடியிருப்பாளர்களை ஒரு யானை திடீரென தாக்க முயன்றது. அதிர்ஷ்டவசமாக, அனைவரும் வேகமாக வீட்டிற்குள் ஓடி உயிர் தப்பினர்.



இந்த சம்பவத்தை அக்கம்பக்கத்தினர் தங்கள் கைபேசிகளில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

இதற்கு முந்தைய நாள், தடாகம் தண்ணீர் பந்தல் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த ஓலைக் குடிசையை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...