கோவையில் காதலித்து ஏமாற்றிய இளைஞர் மீது இளம்பெண் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கோவை செல்வபுரத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண், 6 ஆண்டுகளாக காதலித்த இளைஞர் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியரை நாடியுள்ளார்.


கோவை: கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சினேகா, அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். விக்னேஷ் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை சினேகாவுடன் தனிமையில் இருந்துள்ளார். ஆனால் பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியுள்ளார்.

இது தொடர்பாக சினேகா போத்தனூர் மகளிர் காவல் நிலையத்திலும், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், ஜூலை 16 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

சினேகா கூறுகையில், புகார் அளித்தால் தன்னையும் தனது குடும்பத்தையும் கொலை செய்து விடுவதாக விக்னேஷ் மிரட்டி வருவதாகவும், விக்னேஷ் திமுகவைச் சேர்ந்தவர் என்பதால் காவல் நிலையத்தில் புகாரை ஏற்க மறுப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், விக்னேஷுடன் நெருக்கமாக பழகியதில் தனக்கு குழந்தை உண்டாகி மூன்று மாதம் கர்ப்பிணியாக இருந்ததாகவும், அப்போது விக்னேஷின் பெற்றோர் கர்ப்பத்தை கலைத்து விட்டால் திருமணம் செய்து வைப்பதாக கூறியதாகவும் தெரிவித்தார். ஆனால் கர்ப்பத்தை கலைத்த பிறகு திருமணத்திற்கு மறுத்து விட்டனர் என்றும் கூறினார்.

விக்னேஷ் தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை தொடர்ந்து உடலுறவுக்கு அழைத்து மிரட்டுவதாகவும் சினேகா குற்றம்சாட்டினார். மேலும், தாங்கள் காதலித்த போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் தனிமையில் இருந்த போது எடுத்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டுவதாகவும் தெரிவித்தார்.

தன்னை ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல் தனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுத்த விக்னேஷ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சினேகா கேட்டுக்கொண்டார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...