கோவையில் காதலித்து ஏமாற்றிய இளைஞர் மீது இளம்பெண் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கோவை செல்வபுரத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண், 6 ஆண்டுகளாக காதலித்த இளைஞர் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியரை நாடியுள்ளார்.


கோவை: கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சினேகா, அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். விக்னேஷ் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை சினேகாவுடன் தனிமையில் இருந்துள்ளார். ஆனால் பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியுள்ளார்.

இது தொடர்பாக சினேகா போத்தனூர் மகளிர் காவல் நிலையத்திலும், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், ஜூலை 16 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

சினேகா கூறுகையில், புகார் அளித்தால் தன்னையும் தனது குடும்பத்தையும் கொலை செய்து விடுவதாக விக்னேஷ் மிரட்டி வருவதாகவும், விக்னேஷ் திமுகவைச் சேர்ந்தவர் என்பதால் காவல் நிலையத்தில் புகாரை ஏற்க மறுப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், விக்னேஷுடன் நெருக்கமாக பழகியதில் தனக்கு குழந்தை உண்டாகி மூன்று மாதம் கர்ப்பிணியாக இருந்ததாகவும், அப்போது விக்னேஷின் பெற்றோர் கர்ப்பத்தை கலைத்து விட்டால் திருமணம் செய்து வைப்பதாக கூறியதாகவும் தெரிவித்தார். ஆனால் கர்ப்பத்தை கலைத்த பிறகு திருமணத்திற்கு மறுத்து விட்டனர் என்றும் கூறினார்.

விக்னேஷ் தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை தொடர்ந்து உடலுறவுக்கு அழைத்து மிரட்டுவதாகவும் சினேகா குற்றம்சாட்டினார். மேலும், தாங்கள் காதலித்த போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் தனிமையில் இருந்த போது எடுத்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டுவதாகவும் தெரிவித்தார்.

தன்னை ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல் தனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுத்த விக்னேஷ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சினேகா கேட்டுக்கொண்டார்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...