கோவையில் காதலித்து ஏமாற்றிய இளைஞர் மீது இளம்பெண் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கோவை செல்வபுரத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண், 6 ஆண்டுகளாக காதலித்த இளைஞர் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியரை நாடியுள்ளார்.


கோவை: கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சினேகா, அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். விக்னேஷ் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை சினேகாவுடன் தனிமையில் இருந்துள்ளார். ஆனால் பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியுள்ளார்.

இது தொடர்பாக சினேகா போத்தனூர் மகளிர் காவல் நிலையத்திலும், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், ஜூலை 16 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

சினேகா கூறுகையில், புகார் அளித்தால் தன்னையும் தனது குடும்பத்தையும் கொலை செய்து விடுவதாக விக்னேஷ் மிரட்டி வருவதாகவும், விக்னேஷ் திமுகவைச் சேர்ந்தவர் என்பதால் காவல் நிலையத்தில் புகாரை ஏற்க மறுப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், விக்னேஷுடன் நெருக்கமாக பழகியதில் தனக்கு குழந்தை உண்டாகி மூன்று மாதம் கர்ப்பிணியாக இருந்ததாகவும், அப்போது விக்னேஷின் பெற்றோர் கர்ப்பத்தை கலைத்து விட்டால் திருமணம் செய்து வைப்பதாக கூறியதாகவும் தெரிவித்தார். ஆனால் கர்ப்பத்தை கலைத்த பிறகு திருமணத்திற்கு மறுத்து விட்டனர் என்றும் கூறினார்.

விக்னேஷ் தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை தொடர்ந்து உடலுறவுக்கு அழைத்து மிரட்டுவதாகவும் சினேகா குற்றம்சாட்டினார். மேலும், தாங்கள் காதலித்த போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் தனிமையில் இருந்த போது எடுத்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டுவதாகவும் தெரிவித்தார்.

தன்னை ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல் தனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுத்த விக்னேஷ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சினேகா கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...