தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, 2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார். ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்கள் 2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் வளர்ச்சிக்காக பணியாற்றி வரும் ஆர்வலர்களை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு தமிழ் ஆர்வலரைத் தேர்வு செய்து இந்த விருதை வழங்கி வருகிறது.

இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ.25,000/- ரொக்கப்பரிசும் தகுதியுரையும் வழங்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் https://tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

1. தன்விவரக் குறிப்புகள்

2. வட்டாட்சியர் வழங்கும் குடியிருப்புச் சான்று அல்லது ஆதார் அட்டை நகல்

3. வெளியிடப்பட்ட நூல்கள், கட்டுரைகள் பற்றிய விவரங்கள் (பட்டியலோடு ஒவ்வொன்றிலும் ஒரு படி இணைக்க வேண்டும்)

4. தமிழ்ச்சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் பொறுப்பு அல்லது உறுப்பினர் விவரம்

5. விருதுக்குத் தகுதியாகக் குறிப்பிடத்தகு பணிகள்

6. தமிழறிஞர்கள் இருவரின் பரிந்துரைக் கடிதம்

7. மாவட்டத்தில் செயற்படும் தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம்

8. இரண்டு கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம்

9. ஆற்றிய தமிழ்ப்பணிகளுக்கானச் சான்றுகள்

விண்ணப்பங்களை கோயம்புத்தூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு 0422-2300718 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துணைஇயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...