கோவை கணபதி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எம்.பி, ஆட்சியர் ஆய்வு

கோவை கணபதி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எம்.பி கணபதி ராஜ்குமார், ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சாலை விரிவாக்கம் மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


Coimbatore: கோவை மாநகர் கணபதி பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என நெடுநாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ஜூலை 16 அன்று மதியம் அப்பகுதியில் கோவை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை ஆட்சியர் Kranthi Kumar Pati, கோவை மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran மற்றும் அரசு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆட்சியர் Kranthi Kumar Pati, "சத்தி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் நெடுஞ்சாலைத்துறை மற்றும் கோவை மாநகராட்சி சார்பில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க உடனடியாக என்ன செய்ய முடியும், கால அவகாசம் எடுத்து என்ன செய்ய முடியும் என்பதை பற்றிய ஆலோசனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்," என்றார்.



ஆட்சியர் மேலும் கூறுகையில், "இங்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் சாலை விரிவாக்கம் செய்வதற்கான இடம் கிடைக்கும் என்ற கருத்து ஆய்வின் பின் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த பணிகள் விரைவில் துவங்கும்," என்றார்.

சக்தி ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கணபதி வேலன் தியேட்டர் முதல் சூர்யா மருத்துவமனை வரை சாலை விரிவாக்கம் செய்ய நிதி ஒதுக்க வேண்டும் என்ற 2020 அக்டோபர் மாத கோவை மாநகராட்சி தீர்மானத்தின்படி நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என தெரிகிறது. இங்கு 3 மீட்டர் அளவுக்கு சாலை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.



"மேலும் 73,000 சதுர அடி நிலம் விரிவாக்கத்திற்கு தேவைப்படுகிறது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் நிலத்தை கையகப்படுத்தும் பணி 1-2 மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...