திருப்பூரில் பூரண மதுவிலக்கு மற்றும் பாதுகாப்பு கோரி முதலமைச்சருக்கு மனு

திருப்பூரில் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பில் பூரண மதுவிலக்கு, கூலிப்படை ஒழிப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுடன் முதலமைச்சருக்கு மனு அளிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று (15.7.2024) ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படையினரை என்கவுண்டர் செய்ததற்காக தமிழக அரசுக்கும் தமிழக காவல்துறைக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவேலை செய்பவர்கள், இந்துத்துவ பணி செய்பவர்கள், மற்றும் சட்டத்துக்கு புறம்பான செயல்களுக்கு எதிராக மனு கொடுப்பவர்கள் ஆகியோருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் லோட்டஸ் மணிகண்டன் அளித்துள்ளார்.

Newsletter

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...