கோவை: க.க.சாவடி, குப்பேபாளையம், போத்தனூர் துணை மின் நிலையங்களில் நாளை மின்தடை

கோவையில் மூன்று துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 16 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் மின்தடை அமலில் இருக்கும்.


கோவை: கோவை மாவட்டத்தில் க.க.சாவடி, குப்பேபாளையம் மற்றும் போத்தனூர் ஆகிய மூன்று துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (ஜூலை 16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

க.க.சாவடி துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக முருகன்பதி, சாவடிபுதூர், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனூர், வீரப்பனூர், ஏ.ஜி.பதி, குமிட்டிபதி, திருமலையாம்பாளையம், ரங்கசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

குப்பேபாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒன்னிபாளையம், சிக்காரம்பாளையம், சென்னிவீரம்பாளையம், கள்ளிப்பாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், செங்காளிபாளையம், புகலூர் (ஒரு பகுதி), வடவள்ளி, குரும்பபாளையம், கரிச்சிபாளையம், கதவுகரை, புத்தூர், வடுகபாளையம், மொண்டிகாளிபுதூர், ரங்கப்பகவுண்டன்புதூர், மூணுகட்டியூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

போத்தனூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக நஞ்சுண்டாபுரம், வெள்ளலூர், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீராம் நகர், இந்திரா நகர், ஈஸ்வரன் நகர், அன்பு நகர், ஜெ.ஜெ.நகர், அண்ணாபுரம், அவ்வை நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

மேற்கூறிய அனைத்து பகுதிகளிலும் மின்தடை நாளை (ஜூலை 16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...