கோவையில் மது போதையில் டாஸ்மாக் அருகே ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொலை

கோவை வெள்ளலூரில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் 50 வயது நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.


கோவை: கோவை இடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சேகர் (50) என்பவர் வெள்ளலூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்துவதற்காகச் சென்றுள்ளார். அங்கு மற்றொரு மேஜையில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றிய நிலையில் பார் ஊழியர்கள் அவர்களை வெளியேற்றினர். பின்னர் சேகரை மீண்டும் தாக்கி கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி சேகர் கீழே விழுந்துள்ளார். அவரைத் தாக்கிய நபர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.



நீண்ட நேரம் ஆகியும் சேகர் எழுந்து செல்லவில்லை. அப்போது அங்கு மது அருந்த வந்த ஒருவர் அவரை எழுப்ப முயன்றுள்ளார். அவரைத் திருப்பிப் பார்க்கும்போது கல்லில் பின் பக்க தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்து ஓடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து டாஸ்மாக் பார் ஊழியர்களிடமும், சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் சேகரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து, தகராறில் ஈடுபட்டு சேகரைக் கீழே தள்ளிக் கொலை செய்த நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். டாஸ்மாக் மதுக்கடை அருகே நடந்த இந்தக் கொலைச் சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...