கோவை விமான நிலையத்தில் பயணியிடம் பணம் திருடிய பாதுகாப்பு ஊழியர் கைது

கோவை விமான நிலையத்தில் பயணி ஒருவரின் பையில் இருந்த 660 ரூபாயை திருடிய பாதுகாப்பு ஊழியர் கைது செய்யப்பட்டார். சம்பவம் ஜூலை 13 அன்று நடந்தது.


கோவை: கோவை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து பணம் திருடிய பாதுகாப்பு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். இந்தப் பணிக்கு தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பாதுகாப்பு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 13 அன்று விமான நிலையத்தில் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, பாதுகாப்பு ஊழியர் சிவக்குமார் (58) என்பவர் ஒரு பயணியின் பையை வாங்கி ஸ்கேனிங் எந்திரத்திற்குள் அனுப்பி சோதனை செய்தார். அந்த நேரத்தில், அவர் பையில் இருந்த 660 ரூபாயை திருடினார்.

இதனைக் கவனித்த பயணி உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதையடுத்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையின் இன்ஸ்பெக்டர் அஜய்குமார் (39), பீளமேடு காவல் நிலையத்தில் முறையான புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, சூலூர் செங்கத்துறையைச் சேர்ந்த பாதுகாப்பு ஊழியர் சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் விமான நிலைய பாதுகாப்பு அமைப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பில் உள்ளவரே இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டது கடும் கண்டனத்திற்குரியது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...