கோவையில் வளர் இளம் பருவத்தினரின் நலன் குறித்த தென்மண்டல கருத்தரங்கம்

கோவையில் குழந்தைகள் நல மருத்துவ சங்கம் மற்றும் அடலசன்ட் ஹெல்த் அகாடமி சார்பில் வளர் இளம் பருவத்தினரின் உடல் மற்றும் மனநலப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தென்மண்டல அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.


கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் குழந்தைகள் நல மருத்துவ சங்கம் மற்றும் அடலசன்ட் ஹெல்த் அகாடமி சார்பில் வளர் இளம் பருவத்தினருக்கு ஏற்படும் உடல் மற்றும் மனநல பிரச்சனைகளுக்கு தீர்வு காண தென்மண்டல அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.



இந்த கருத்தரங்கில் குழந்தைகள் நல மருத்துவ சங்கம் மற்றும் அடலசன்ட் ஹெல்த் அகாடமியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். சங்கத்தின் நிர்வாகிகளான டாக்டர் இஸ்மாயில், டாக்டர் லட்சுமி சாந்தி மற்றும் டாக்டர் ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.



வளர் இளம் பருவத்தினருக்கு, குறிப்பாக 10 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்படும் உடல் நலம் மற்றும் மனநல பிரச்சினைகள் குறித்தும் அதற்குரிய தீர்வுகள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் விளக்கப் படங்களுடன் பயிற்சியாளர்கள் விளக்கம் அளித்தனர்.



குறிப்பாக செல்போன் பயன்படுத்துதல், போதைப் பொருட்களை பயன்படுத்துதல், உணவு பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் ஏற்படும் உடல்ரீதியான மற்றும் மன ரீதியான பாதிப்புகளை எப்படி மருத்துவர்கள் அணுக வேண்டும் என்பது குறித்தும் இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...