கோவையில் வளர் இளம் பருவத்தினரின் நலன் குறித்த தென்மண்டல கருத்தரங்கம்

கோவையில் குழந்தைகள் நல மருத்துவ சங்கம் மற்றும் அடலசன்ட் ஹெல்த் அகாடமி சார்பில் வளர் இளம் பருவத்தினரின் உடல் மற்றும் மனநலப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தென்மண்டல அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.


கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் குழந்தைகள் நல மருத்துவ சங்கம் மற்றும் அடலசன்ட் ஹெல்த் அகாடமி சார்பில் வளர் இளம் பருவத்தினருக்கு ஏற்படும் உடல் மற்றும் மனநல பிரச்சனைகளுக்கு தீர்வு காண தென்மண்டல அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.



இந்த கருத்தரங்கில் குழந்தைகள் நல மருத்துவ சங்கம் மற்றும் அடலசன்ட் ஹெல்த் அகாடமியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். சங்கத்தின் நிர்வாகிகளான டாக்டர் இஸ்மாயில், டாக்டர் லட்சுமி சாந்தி மற்றும் டாக்டர் ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.



வளர் இளம் பருவத்தினருக்கு, குறிப்பாக 10 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்படும் உடல் நலம் மற்றும் மனநல பிரச்சினைகள் குறித்தும் அதற்குரிய தீர்வுகள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் விளக்கப் படங்களுடன் பயிற்சியாளர்கள் விளக்கம் அளித்தனர்.



குறிப்பாக செல்போன் பயன்படுத்துதல், போதைப் பொருட்களை பயன்படுத்துதல், உணவு பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் ஏற்படும் உடல்ரீதியான மற்றும் மன ரீதியான பாதிப்புகளை எப்படி மருத்துவர்கள் அணுக வேண்டும் என்பது குறித்தும் இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...