கோவை: வீட்டில் 62 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - மூவர் கைது

கோவை சின்னவேடம்பட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 62 கிலோ புகையிலை பொருட்கள் சரவணம்பட்டி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: கோவை மாவட்டம் உடையாம்பாளையம் ரோடு சின்னவேடம்பட்டி பாரதி தெருவில் உள்ள ஒரு வீட்டில் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சரவணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஜூலை 12 அன்று சரவணம்பட்டி போலீசார் குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையின் போது, விமல், ஹான்ஸ், கணேஷ் போன்ற பிராண்டுகளின் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மூன்று நபர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் சின்னவேடம்பட்டி சுப்பிரமணியம் நகரைச் சேர்ந்த மணிகண்டன் (45), கணபதி ராஜீவ் காந்தி ரோட்டைச் சேர்ந்த பாலாஜி (35) மற்றும் கணபதி மூகாம்பிகை நகரைச் சேர்ந்த ராம்குமார் (32) ஆகியோர் ஆவர்.

போலீசார் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து மொத்தம் 62 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...