கோவையின் புதிய மாஸ்டர் பிளான் 2025 ஜனவரியில் தயாராகும்

கோவையின் புதிய மாஸ்டர் பிளான் 2025 ஜனவரியில் தயாராகும். 3000 பொது கருத்துக்களை ஆராய்ந்து, திருத்தப்பட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் ஒப்புதலுக்குப் பிறகு இறுதி செய்யப்படும்.


Coimbatore: கோவை மாநகரின் புதிய மாஸ்டர் பிளான் 2025 ஜனவரியில் தயாராகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவை மாநகரின் கடைசி மாஸ்டர் பிளான் 1994ல் புதுப்பிக்கப்பட்டது. 2041 ஆம் ஆண்டில் கோவை மாநகரின் மக்கள் தொகை 45 லட்சமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு புதிய மாஸ்டர் பிளான் தேவை என்ற கோரிக்கை தொழில்துறை, சமூக மற்றும் இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, பல்வேறு அரசுத் துறைகள் கோவை மாநகராட்சியுடன் இணைந்து வரைவு மாஸ்டர் பிளானை உருவாக்கின.

இந்த வரைவு 2023 அக்டோபரில் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது. அரசின் ஒப்புதலுக்குப் பிறகு, 2024 பிப்ரவரி 11 அன்று இந்த வரைவு அறிக்கை https://coimbatorelapa.com/ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பொதுமக்களின் கருத்துக்களை பெற மே 15, 2024 வரை அவகாசம் வழங்கப்பட்டது.

தற்போது இந்த வரைவு மாஸ்டர் பிளான் மீது 3000 பொது கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகள் வந்துள்ளன. இவற்றை ஆராய்ந்து முடிக்க இரண்டு மாதங்கள் ஆகும். பின்னர், திருத்தப்பட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, தமிழக அரசின் நகர் ஊரமைப்பு இயக்ககத்திற்கு அனுப்பப்படும்.

அதிகாரிகள் இந்த அறிக்கையை ஆய்வு செய்து உறுதி செய்த பிறகு இறுதி வடிவம் பெறும். இந்த அனைத்து பணிகளும் முடிவடைய 2025 ஜனவரி வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...