கோவையில் 15 அடி உயர டவரில் யோகாசனம் செய்து 12 வயது சிறுவன் உலக சாதனை

கோவையில் 15 அடி உயர டவரில் ஹஸ்த கோணாசனத்தில் 7 நிமிடங்கள் 20 விநாடிகள் நின்று 12 வயது சிறுவன் சர்வஜித் நாராயணன் யூனியன் உலக சாதனை படைத்தார். சுட்டெரிக்கும் வெயிலில் இந்த சாதனையை நிகழ்த்தினார்.


Coimbatore: கோவை சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சர்வஜித் நாராயணன், 15 அடி உயரமான டவரில் நின்று கொண்டு ஹஸ்த கோணாசனத்தில் 7 நிமிடங்கள் 20 விநாடிகள் தொடர்ந்து நின்று யூனியன் உலக சாதனை படைத்தார்.

சரண்யா மற்றும் பாலசுந்தரம் தம்பதியரின் மகனான சர்வஜித், ஏழாம் வகுப்பு மாணவராக இருக்கிறார். சிறு வயதிலேயே யோகாவில் இரண்டு கின்னஸ் சாதனைகள் உட்பட பல விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.



இந்த புதிய உலக சாதனை நிகழ்வு, சர்வஜித் பயிலும் வேலம்மாள் போதி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 15 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட டவரின் மேல் ஏறிய சர்வஜித், அஷ்ட கோணாசனம் எனும் ஆசனத்தை தொடர்ந்து நிலைநிறுத்தினார்.

ரஷ்யாவிலிருந்து வந்த யூனியன் உலக சாதனை புத்தகத்தின் மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட், சர்வஜித்தின் சாதனையை நேரடியாக கண்காணித்தார். சாதனையை அங்கீகரித்த அவர், யூனியன் உலக சாதனை பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.



சுட்டெரிக்கும் வெயிலில், 15 அடி உயரத்தில் கைகளை மட்டுமே சமநிலைப்படுத்தி ஆங்கிள் போஸில் யோகா செய்த சர்வஜித்தின் இந்த உலக சாதனையை, அவரது பள்ளியில் பயிலும் சக மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் பொதுமக்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...